Home News கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யாழ் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யாழ் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் யாழ் ஆயரை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்கள் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்