பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையாரான அடைக்கலம் அமிர்தநாதனின் பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன்போதே பா.உறுப்பினர்கள் இன்று(7) காலை தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் இணைந்து அடைக்கலம் அமிர்தநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.
மேலும், இவருடன் வடமாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.